தென்மேற்கு பருவமழை வட மாநிலங்களில் தொடர்ந்து தீவிரமடைந்து வருவதால் 8 மாநிலங்களுக்கு கனமழை அல்லது அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை வட மாநிலங்களில் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது, தென்மேற்கு அரபிக் கடலில் கடந்த நான்கு நாட்களாக நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்து வந்தது.
அதே போல் மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் தொடர்ந்து கனமழை பதிவாகி இருந்தது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது வெளியிட்டுள்ள செய்தி வெளியீட்டில் வட மாநிலங்களின் பல்வேறு இடங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை முதல் அதீத கனமழைக்கான (extremely heavy rain - 20cm above)வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது.
குறிப்பாக உத்தரபிரதேசம், பீகார், சத்தீஸ்கர், உத்தரகாண்ட், அசாம், மேற்கு வங்கம், மேகாலாயா, அருணாச்சல பிரதேசம், பஞ்சாபின் வடக்கு பகுதிகளில் நாளை முதல் அடுத்த சில நாட்களுக்கு பரவலாக கன மழையும் ஒரு சில இடங்களில் அதீத கனமழைக்காண வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
குறிப்பாக பீகார், மேற்கு வங்கம், அருணாச்சலப் பிரதேசம் அசாம் மற்றும் மேகாலயாவின் பல்வேறு இடங்களில் அதீத கனமழை காண வாய்ப்பு இருப்பதால் அந்த பகுதிகளுக்கு சிகப்பு எச்சரிக்கை (red alert ) விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவ மழையை வலுப்பெறச் செய்யும் சாதக சூழல் தற்போது வடக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவின் பகுதிகளில் நிலவுவதால் அடுத்த சில நாட்களுக்கு பரவலாக வட இந்தியாவில் தொடர் மழை இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.