4 மாத வீட்டுவாடகை கேட்ட உரிமையாளர், ஓட ஓட விரட்டிக்கொலை..குன்றத்துரில் வாடகைதார் வெறிச்செய

சென்னை குன்றத்தூரில் வீட்டு வாடகை கேட்ட உரிமையாளரை, அந்த வீட்டில் குடியிருந்த அஜித் என்ற இளைஞர் குத்திக்கொலை செய்துள்ளார்.


சென்னை, குன்றத்தூரில் 4 மாதமாக வாடகை தராததை கேட்ட வீட்டு உரிமையாளர், வாடகைக்கு குடியிருந்தவரால் ஓட ஓட விரட்டி குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்

திருவல்லிக் கேணியை சேர்ந்தவர் குணசேகரன்(50), ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் இவர் குன்றத்தூர், பண்டார தெருவில் சொந்தமாக வீடு கட்டி ஒரு வீட்டில் அவரும் மற்றொரு வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். அந்த வீட்டில் அஜித் (21), என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்லாத காரணத்தால் கடந்த நான்கு மாதங்களாக வீட்டு வாடகை அஜித் குடும்பத்தினர் தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நேற்று இரவு அஜித் பெற்றோரிடம் குணசேகரன் வாடகை கேட்டுள்ளார். அப்போது வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. நள்ளிரவு வீட்டிற்கு வந்த அஜித்திடம் பெற்றோர் கூறியதையடுத்து இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டு ஆத்திரமடைந்த அஜித் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குணசேகரனை குத்தியுள்ளார். குத்தப்பட்ட குணசேகரன் தன்னை காத்துக்கொள்ள தெருவில் ஓடியுள்ளார் அப்போதும் விடாமல் ஓட, ஓட விரட்டி சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி சென்றார். இதுகுறித்து குன்றத்தூர் போலீசார்  கொலையாளி அஜித்தை கைது செய்தனர்.