தேவை இன்னும் ஒரு பெரியார்
சுய மரியாதை, சாதி எஒழிப்பினை கொள்கை யாய் கொண்டு தமிழ் சமுதாயத்தை மீட்டெடுக்க இயக்கம் கண்ட பெரியார் மண்ணில் அதிகரிக்கும் சாதிய அரசியல் என்பது வேதனை தருவது தான். மூச்சுக்கு முன்னூறு முறை பெரியார் சஅது சிறப்ரபார மண் எனப் பெருமை பேசும் திராவிடக் கட்சிகளே சாதிய அரசயலில் ஈடுபட்டிருப்பது வெட்கத்திற்குரியது.
ஜஸ் டி ஸ் கட் சி பிராமணர்கள் இல்லாத இயக்கம் கண்டு, பிராமணர் அல்லாதவர்களுக்கு அதிகாரத்தில் பங்கு என்ற பிரச்சாரத்தின் மூலம் வெற்றி கண்டிருந்தாலும், காங்கிரஸ் தேர்தல் அரசியலுக்கு வந்த பிறகு ஜஸ்டிஸ் கட்சி காணாமல் போனது. ஆனால் சமூக நீதிக்காக இயக்கம் கண்டபெரியாரின்திராவிடக் கட்சி பின்னாளில் உருவான திராவிடக் கட்சிகளுக்கு கரு வறையானது. இன்று வரை உயிர்ப்புடன் இருக்கிறது.
தேர்தல் அரசியலில் உள் நுழைந்த திராவிட முன்னேற்றக் கழகம் மொழி வழி அரசியலைக் கையி லெடுத்தது. இந்தி திணிப்பை எதிர்த்து திமுக நடத்திய போராட்டம் ஆட்சிக் கட்டிலைப்பிடிக்க உதவியது. திமுக இரண்டாகப் பிளந்து எம் ஜி ஆரின் தலைமையில் அதிமுக உருவான போது கொள்கையளவில் இரண்டு கட்சிகளுக்கும் பெரும் வித்தி யாசம் ஏதுமில்லை. எம்ஜிஆர் என்ற தனிமனிதனுக்கான ஆதரவே அதிமுகவின் பலமாகவும், ஊழல் குற்றச் சாட்டுகள் திமுகவின் பலவீன மாகவும் இருந்தது. திரையில் நாயகனாககண்ட எம்ஜிஆரை நிஜவாழ்விலும் நாயகனாகவே தமிழ் நாடு மக்கள் கண்டதால் பெரும் வெற்றி அவருக்கு சாத்தியமானது. இப்போதும் சாதிய அரசியல் தமிழ் நாடு அரசியல் போக்கில் பெரும் பங்கு வகிக்கவில்லை . சமூக நீதிக்கான திராவிடர் கழக போராட்டம் தொடர்ந்து கொண்டுதானிருந்தது.
அரசாங்க அதிகார அமைப்புகளில் பிராமணர் களின் ஆதிக்கம் திமுக ஆட்சி காலத்தில் படிப்படியாக குறைக்கப்பட்டது. கல்வியில் இட ஒதுக்கீடு, அரசு வேலை யில் இட ஒதுக்கீடு போன்ற நடவடிக்கைகளை திமுக முன் னெடுத்தாலும் தேர்தல் வெற்றி தோல்வி களை தீர்மானிக்கும் காரணி களாக சாதிய அரசியல் இருந்ததில்லை. எண்பது களில் இறுதியில் வன்னியர் நலனுக்காக மருத்துவர். ராமதாஸ் களம் கண்டார். வன்னியர் சங்கம் பிற்காலத் தில் பாட்டாளி மக்கள் கட்சியானது. தாழ்த்தப் பட்டவர்களின் பிரதிநிதியாக விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், இன்ன பிற அமைப்புகள் உருவாகின. இட ஒதுக்கீடு வேலை வாய்ப்புகளை அதிகரிக்க உதவியதால் பிற்படுத்தப் திமுகவும் பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்ட சாதிகளாக அறிவிக்கக் கோரும் கோரிக்கைகள் அதிகரித்தன. இந்தியா விலேயே அதிக அளவு இட ஒதுக்கீடு உள்ள மாநிலமாக தமிழ் நாடு இருக்கிறது. இருப்பினும், பிராமணரான ஜெயலலிதா தமிழ் நாட்டின் முதல்வராக ஐந்து முறை பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சுதந்திர இந்தியாவில் தேர்தல் அரசியல் தொடங் கிய காலத்திலிருந்து பெரும் பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் வேட்பாளராக அறி விக்கப்படு வது இயல்பாகவே நடந்து வந்தது. சார்ந்திருக்கும் சமூகத்தில் அந்தஸ்தாக இருப்பவர்களும் சமூகத்தின் தலைவர்களால் அடையாளம் காட்டப்படுபவர்களும் தேர்தலில் பங்கேற்று வெற்றி வெற்று வந்தனர். சாதிகளை மறுக்கிற, சுயமரியாதையைக் கொள்கையாகக் கொண்ட கொள்கையாகக் கொண்ட திமுகவும் இதே பாதையில் பயணித்தது. சாதிகளை ஒழிப்பதற்கு பதில் உயிர்ப்புடன்வைத்திருக்கிறது என்றால் மிகையாகாது. சம கால தேர்தல் அரசியலில் சாதிய பலமும், பண பலமும் தேர்தல்களில் முக்கிய பங்கு வகிப்பதை எவரும் மறுக்கவும் முடியாது.
மூச்சுக்கு முன்னூறு முறை பெரியார் மண் எனப் பெருமை பேசும் திராவிடக் கட்சிகளே சாதிய அரசியலில் ஈடுபட்டிருப்பது காங் வெட்கத்திற்குரியது.
சிறுபான்மைச் சாதியைச் சேர்ந்த எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா தங்களது தனிப்பட்ட ஆளுமையால் தலைவர்களாக திகழ்ந்தனர். கலைஞர்தமிழனத்தலைவராக மக்களால் அறியப்பட்டார். இவர்களது தனிப்பட்ட கவர்ச்சியையும் தாண்டி வேட்பாளர்களை சாதிய பின்னணியையும் கருத்தில் கொண் டேஅ றி வி த் து தேர்தலைச் சந்தித்தனர் . வெற்றி தோல்வி அவர்களது ஆட்சியின் மீதான விருப்பு வெறுப்பு அடிப்படையில் இருந்தாலும் வேட்பாளர்களின் சாதியும் ஒரு பங்கு வகிக்கவே செய்தது. வலிமையான ஆளுமைகள் இல்லாத களமாக தமிழ் நாடு இப்போது உள்ளது. கொள்கைகளிலும் பெரும் வித்தியாசம் இல்லை. தமிழ் மொழி சார்ந்த அரசியல் அனுதாபம் திமுக விடம் இருந்து முற்றிலும் பறிபோகவில்லை. முக்குலத் தோர் ஆதரவு பெரும்பான் மையாக அதிமுக இருந்த நிலையிலிருந்து பிளவுபட்டு நிற்கிறது. முதன் முறையாக ஆட்சியின் தலைமைப் பதில் பொறுப்பை சுவைத்திருக்கும் கவுண்டர்சமுதாயம் அதிகாரத் தைத் தக்க வைத்துக் கொள்ள அணி சேர்ந்து கொள்ள நினைப்பது இயல்பு. மற்ற சாதிய சமூகத்தினரும் அங்கனமே அவரவர் பலத்தைக் காட்ட நினைத்து பல அமைப்புகளாய், ஒரு கட்சிக்குள்ளேயே பலம் வாய்ந்த குழுக்களாய் வலம் வருகின்றனர். தமிழகத்தில் வேரூன்ற உரிய முயற்சிக்கும் பாஜக சாதிய அடிப்படை யி லின்றி மத அடிப்படையிலான அரசியலைமுன்னெடுக் பட்டவரின் கிறது. அதன் விளை வாக விநாயகர் ஊர்வலம் விவா திருப்தி தப் பொருளா கிட்டதட்ட கிறது.குருபூஜைகள் காவல் துறை களால் கெடு பிடி தலைமையைப் யுடன் நடத் வில்லை தப்பட வேண்டி யிருக்கின்றன. தலைமைகளும் இஸ்லாமிய, கிறித் முறை துவ அமைப்புகள் பெருமை தமிழ் நாட்டின் பெரிய கட்சி கட்சிகளே களோடோ, ஈடுபட்டிருப்பது தேசியகட்சியான சமூக காங் கி ர ஸோடோ இணக்கமாக : இருந்து வந்துள்ளனர். இவர்களும் கூட இன்று தங்கள் பலத்திற்கேற்ற அங்கீ காரத்தை நாடுகின்றனர். சிறு குழுக்களின் தலைவர்கள் கூட வெளிப்படையாக சாதிய அடையாளத்துடன் வலம் வருகின்றனர். சமீபத்தில் கருணாஸ் பொது மேடையில் காவல் துறைக்கு சவால் விட்டுப் பேசியது கூட அவரது சமுதாய இளைஞர்கள் முன்பு தன்னைத் தலைவனாகக் கா ட் டி க் கொள்ள எடுத்த முயற்சியேயன்றி வேறொன்று மில்லை .
பிராமணர் எதிர்ப்பில் தொடங்கி, அதிகாரத்தில் - சாதியினருக்கு சாதியினருக்கு பெரும் பங்கை பெற்றுக் கொடுத்த இரண்டு திராவிடக் கட்சி களின் ஆட்சியிலும் சாதி ஒழிய வில்லை. மாறாக வளர்ந்து வந்திருக்கிறது.சமூகநீதிக்கான குரல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந் தாலும் சாதி யற்ற சமூக மாற்றம் இன்ன மும சாத்தியமாகவில்லை. சமத்துவபுரங்கள் தோன்றி யுள்ளன, சமத்துவ மனங்கள் இன்னமும் சமைக்கப்பட வில்லை. செயலாற்ற வேண்டிய அரசியல் கட்சி களுக்கு சாதி உயிர்ப்புடன் இருக்க வேண்டியது அவசிய மாகப்படுகிறது.
பெரும் எண்ணிக்கையில் உள்ள தாழ்த்தபட்ட சமூகத்தினர் இரண்டு திராவிடக் கட்சிகளையோ, காங்கிரஸையோ ஆதரித்தே வருகின்றனர். இவர்களது வாக்குகள் பெரிய அரசியல் கட்சிகளுக்கு அவசியம். ஆனால் ஆட்சி அதிகாரத்தில் உரிய பங்கை இதுவரை எந்த கட்சியும் இவர்களுக்கு அளிக்கவில்லை என்பது தான் உண்மை. தாழ்த்தப் பட்டவரின் சம்பந்தி , சகோதரன் என்ற பெருமைமிகு வார்த்தைகளால் மட்டுமே திருப்தி செய்யப்படுகிறார்கள். கிட்டதட்ட 20% மக்கள் தொகையில் இருப்பவர் களால் தங்களுக்கான வலுவான வலுவான ஆளுமை மிக்கத் தலைமையைப் பெற முடிய வில்லை . இருக்கும் சில தலைமைகளும் சீட்டு பேர அரசியலில் தம் மக்களுக்கு நியாயம் செய்பவர்களாக இல்லை என்பது நிதர்சனம். வேலை வாய்ப்புகளுக்கு இட ஒதுக்கீட்டை அரசியல் சாசனம் அளித்துள்ளது. சமூக நீதியில் முன் மாதிரியானது தமிழ் நாடு என்ற கருத்தாக்கம் திராவிட அரசியல் கட்சிகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு மட்டுமே சமூக நீதி என்ற மாய பிம்பம் இளைஞர்கள் முன் வைக்கப்படுகிறது. சமுதாய மாற்ற மே சமூக நீதி என்பதை மிகச் சில இயக்கங்கள் தான் குரலெடுத்துச்சொல்கின்றன. இதனை இளைஞர்கள் உணர்ந்திருந்தாலும் பெரும் ஆதரவை இவ்வியக்கவர்கள் பெறவில்லை.. மாற்றம் இங்கிருந்து தான் துவங்கப் போகிறது. இதனைத் துவக்க சாதிச் சம நிலையில் உள்ள ஒருவர் தான் தலைமை ஏற்க இயலும். அந்த ஆளுமை அனைத்துப் பிரிவினரையும் அணைத்துச் செல்லும் தொலை நோக்கு உள்ளவராக இருத்தல் காலத்தின் கட்டாயம். இனி சாதிப் பிரிவு அரசியல் ஆட்சிக்கான ஏணியாக இருத்தல் கூடாது. இப்போதைய உடனடி தேவை, சாதியம் மறைய சாதி ஒழிய ஒரு பெரியார்...